காத்திருப்பதும் சுகம்
நீயின்றி ஓர் நாழிகை ஓர் நாளானது
ஓர் நாளோ ஓர் யுகமானது
உன்னுடன் இருந்த ஒவ்வொரு நாளும்
ஓர் நாழிகை நினைவாய் என்னுள் நின்றுள்ளது
காதல் வந்த பிறகு உன் பெயரைத் தவிர
எதை எழுதினாலும் எழது கோல் தாறு மாறாக கிறுக்கி
எழுத்துப் பிழையில்தான் விட்டது
காத்திருந்தேன் உன் கண்ணிமைக்கும் நொடிக்காக
காதல் வந்த பிறகுதான் உணர்ந்தேன்
காத்திருப்பதும் சுகம் என்று .