விழி வழி



மனோகரமான
மாலை
வேளையில்
சாலை
வீதியில்
வேலை
ஏதுமின்றி
போய்க்கொண்டிருந்தேன் ;


அன்றைக்கு
ஏனோ
வானம்

மேகக்கூட்டமாய்
காட்சியளிக்காமல்
மேகமூட்டமாய்
காட்சியளித்தது ;

அதைக்
கண்டவுடன்
காரணம்
ஏதுமின்றி
ஆழ்மனம்
களித்தது ;

சிறிது
நேரத்தில்
எங்கிருந்தோ
வந்த - ஒரு
குளிர்காற்று
என்
முகத்தைத்
தாக்கியது ;

அந்த

மென்காற்றில்
கொஞ்சம்
வேகம்
தெரிந்தது ;
என்னை
அபகரிக்க
வேண்டும்
என்ற
மோகம்
தெரிந்தது ;
காற்றால்
தேகம்
கிறங்க -
அது
உன்
ஸ்பரிசம்
எனத்
தெரிந்து
கொண்டேன் ;

அந்தத்
தொடுதலில்
உன்
எண்ணம்
யாதெனப்
புரிந்து
கொண்டேன் ;


அப்போது

பார்த்து

வான்கொடியில்
உலரப்
போட்டிருந்த
மேகத்துணிகளைக்
காற்று
பிழிய
ஆகாயம்
மேலிருந்து - ஒரு
நீர்வீழ்ச்சியைப்
பொழிய

அந்

நீர்த்துளிகள்
யாவும்
என்
மேலே விழுந்தன;
விழுந்து
சுவைத்தறியா
தித்திப்பைக்
கொடுத்தன ;

ஆம் !

என்னில்
விழுந்த
நீர்முத்துக்கள்
யாவும்
நீ
கொடுத்த முத்தங்களாய்
உருமாறியது ;


தலையில்,
நெற்றியில்
கண்களில்,
இதழ்களில்.... என
நீ
செய்த பயணத்தால்
உள்ளம்
கள்ளுண்ட
வண்டைப்
போல் தடுமாறியது ;

அவ்வமயம்
ஒரு
மின்னல்
வெட்டியது -
நீ
புன்னகைத்தாய் ;
சில

கணங்கள்
கழித்து
இடியொலி
கேட்டது;
நீ
பலமாகச்
சிரித்துக்
கொண்டிருந்தாய்;

உன்

சிரிப்பின்
அர்த்தம்
எனக்குப்
புரியவில்லை; உன்
முத்தங்கொடுத்த
போதையால்
கண்ணுக்கேதிரே
எதுவும்
தெரியவில்லை;


அப்போது
திடீரென்று
உன்
மழைக்கரத்தால்- என்னை
இழுத்து

வளைத்து

அணைத்து -
பின்
ஆரத்
தழுவினாய்;
வன்மையும்
மென்மையும் - ஒரு
சேரத்
தழுவினாய்;

காதல்
செய்யா
இடம்
பார்த்து
நீ
நெருங்கினாய்;
நான்
நொறுங்கினேன்;
என்னுடலின்
இடமெங்கும்
ஆளத்
தொடங்கினாய்; நான்
மீள
முயன்றேன்;
தோற்றுப்
போனேன் !! உனக்கு
அடிமை
ஆனேன்;

பின்

மயக்கம்
தெளிந்து
கண்
விழித்தேன்;
உன்னைத்
தேடிச்
சுற்றுமுற்றும்
பார்த்தேன்;
மழை
விட்டிருந்தாலும்
வானம்
விடவில்லை;
அப்போது

புரிந்து
கொண்டேன்; நீ
எப்போதும்

என்னோடு
இருப்பாய் என்று
தெரிந்து
கொண்டேன்;

என்

இல்லம்
நோக்கி
நடக்க
ஆரம்பித்தேன்;
மழை விட்டிருந்தாலும்
வானம் விடவில்லை

 
அப்போது
புரிந்து கொண்டேன் 
நீ
எப்போதும்
என்னோடு இருப்பாய் என்று
தெரிந்து கொண்டேன்