எதையாவது செய்து தொலை - தமிழச்சி

யெத்தனை யெத்தனை

பேராசைகள் எனக்குள்

ஒவ்வொன்றாய் சொல்லாமல்

மொத்தமாய் ஒன்றே சொல்ல...



புதியதோர் உலகம் செய்ய

பழைய உலகத்தை

யெத்தனை முறை

வெடிவைத்தால் தகருமென

கணக்குப் போடும் வன்நெஞ்சம்....



பாவம் இந்த மனிதர்களை

வேற்று இடத்திற்குள்

வைத்துவிட்டுதான்

காரியம் செய்ய வேண்டும்.

அசுரன் வேதத்தை திருடிக் கொண்டு

பூமியை பாயைப்போல் சுற்றியது போல....

ஏதாவது, எப்படியாவது, எதையாவது

செய்து தொலைக்க வேண்டும்!!!