கொன்றுவிடாதே....
கடலோடு சிறு கடிதம்
கரையோடு சிறு கவிதை
நினைவோடு சில நிஜங்கள் - வானின்
நீலத்தோடு சில நிமிடங்கள்
மனதோடு கொஞ்சம் மௌனம் - உன்னை
மறக்கமுடியாமல் என் காலங்கள்
விழியோடு எதிர்பார்புகள்
உன் பதிலுக்கான நேரங்கள்
காகிதத்தில் என் கண்ணீர் துளிகள்
கசிந்துபோன பேனா மை
காலங்கள் அழிவதில்லை - என் மனதிலுள்ள
காதலும் அழிவதில்லை
காலமெலாம் காத்திருப்பேன் - உனக்காக
உன் மௌனத்தினால் எனை கொன்றுவிடாதே....