நீ
கூர்வாள் கொண்ட வன்மையும் நீ;
நறுமலர் கொண்ட மென்மையும் நீ;
மாமலை கொண்ட மோனம் நீ;
கோகிலம் பாடும் கானம் நீ;
வெங்கதிர் பரப்பும் ஒளியும் நீ;
அந்தகாரம் கொடுக்கும் இருளும் நீ;
பாலை வனம் கொண்ட வெறுமையும் நீ;
சோலை வனம் கொண்ட முழுமையும் நீ;
தோளோடு சாய்கையில் தோழியும் நீ;
தினவோடு பாய்கையில் எதிரியும் நீ;
சகலமும் கற்றுணர்ந்த ஆசானும் நீ;
தேடாப் பொருளைத் தேடும் சீடனும் நீ;
காதல் புரிகையில் மனைவியும் நீ;
கருணை சொரிகையில் அன்னையும் நீ;
கண்ணோடு பார்த்தால் நீயும் நீ;
என்னோடு பார்த்தால் நானும் நீ;
காண்பொருள் யாவிலும் இருப்பதும் நீ;
யாவிலும் நீயிருப்பதால் உலகமும் நீ;