என் உயிர் தோழியே, நமது நட்பின் அடுத்த கட்டம் தான் என்ன ? என்னால் இனியும் தாமதிக்க முடியாது, இதோ இப்பொழுதே ஒத்துக்கொள்கிறேன் , எல்லாவற்றையும் ஒப்புக்கொள்கிறேன் ...!
எனது நெஞ்சில் சாய்ந்து அழுத நாட்களை, என் சட்டை பட்டனில் சிக்கிய, உன் குந்தலின் பொக்கிஷ செதறல்களுக்கு தெரியும், நமது நட்பின் அடுத்த கட்டம் என்னவென்று !
உனது இமைக்குளங்கள் நிரம்பும் முன் , அணையாய் தடுத்த எனது கைக்குட்டைக்கு தெரியும், நமது நட்பின் அடுத்த கட்டம் என்னவென்று !
என்றேனும் , எவர்கேனும் அல்ல எதற்கேனும் உதவி வேண்டுமானால் , முதலாய் உன் மனதில் மின்சார மின்னலாய், வந்து செல்லும் ஆடவன் நான்தானே? யோசித்து சொல்லடி என்னுயிர் தோழியே, நமது நட்பின் அடுத்த கட்டம் என்னவென்று !
இனி எவரிடமும் கூறிவிடாதே , நான் உன் தோழன் என்று ! ஆனால் இவனே என்னவனென்று, அறிமுகப்படுத்த மாட்டாயா கண்ணே? இன்னுமா புரியவில்லை என்னாருயிர் தோழியே? நமது நட்பின் அடுத்த கட்டம் என்னவென்று !
உன் கைபேசிக்கு தெரியும் , ஒவ்வொரு இரவிலும் நித்திரை முன், நீ கடைசியாய் பேசும் ஆடவன் நானென்று , காலையில் என் படுக்கையறை கடிகாரத்துடன், போட்டி போட்டு எழுப்பிவிடும் முதலவள் நீயே என்று ! இன்னுமா தெரியவில்லை தோழியே, நமது நட்பின் அடுத்த கட்டம் என்னவென்று !
இதோ இப்பொழுதே ஒத்துக்கொள்கிறேன் , எல்லாவற்றையும் ஒப்புக்கொள்கிறேன் ...! நானும் உன்னை விரும்புகிறேன் ! உனது காட்டில் கம்பீரமாய் உலாவரும், ஒற்றை சிங்கமென நான் இருப்பேன் ! உனது காவலனாய் இருப்பேன் ! என்றும் இதே நட்புடனும் இருப்பேன் ! உனது காதலனாய் இருப்பேன் பெண்ணே ! பெருமையுடன் கூறுவாய் பெண்ணே, இப்புவுலகில் உன்னைவிட அதிர்ஷ்டசாலி எவரும் இல்லயென்ன !
இன்னுமா அறியவில்லை ? நமது நட்பின் அடுத்த கட்டம் என்னவென்று ! என்னால் இனியும் தாமதிக்க முடியாது, இதோ இப்பொழுதே ஒத்துக்கொள்கிறேன் , எல்லாவற்றையும் ஒப்புக்கொள்கிறேன் ... நீ இல்லாமல் நான் இல்லையென்று